ஈஸி ஈஷா அறக்கட்டளை | நல் வாழ்க்கைக்கான விழிப்புணர்வு பிரச்சாரம்
✨ "மாற்றத்தைத் நம்மிடம் இருந்தே தொடங்குவோம் !" ✨
தொடர்ச்சியான மொபைல் பயன்பாடு கண்பார்வை குறைவு, மன அழுத்தம், உறவுகளில் விரிசல், குழந்தைகளின் கற்கும் திறன் வீழ்ச்சி ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. டிஜிட்டல் டிடாக்ஸ் அவசியம்.
மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு குடும்ப உறவுகளை சிதைக்கிறது, வறுமையை அதிகரிக்கிறது, உடல் நலக் கேடுகளை உண்டாக்குகிறது. இளைஞர்களை போதைக்கு அடிமையாகாமல் பாதுகாப்பது நம் கடமை.
எளிமையான வாழ்க்கை மன அமைதியைத் தரும், செலவுகளைக் குறைக்கும், சுற்றுச்சூழலுக்கும் நல்லது. பொருளாதார சுமையின்றி மகிழ்ச்சியாக வாழலாம்.
உணவை வீணாக்குவது வளங்களை வீணாக்குகிறது. மீதி உணவைப் பகிர்வோம், திட்டமிட்டு உணவு வாங்குவோம்.
உடற்பயிற்சி இல்லாமல் உட்கார்ந்த வாழ்க்கை உடல் பருமன், இதய நோய், சர்க்கரை நோய் போன்றவற்றை விளைவிக்கிறது. தினமும் நடைபயிற்சி, விளையாட்டு அவசியம்.
சமூக ஊடகங்களின் அதீத பயன்பாடு தனிமையை அதிகரிக்கிறது. நேரடி உரையாடல், குடும்பத்துடன் செலவு செய்யும் நேரம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
சராசரியாக ஒரு நபர் மொபைலில் செலவிடும் நேரம்
இளைஞர்களில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு (கடந்த தசாப்தம்)
ஆண்டுதோறும் வீணாகும் உணவு - இவற்றில் பாதியை கொண்டு உலகத்தில் பசியை போக்கலாம் !
✅ பொதுமக்கள் கூடுமிடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள், குடியிருப்புப் பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தல்.
✅ எளிய வாழ்க்கை முறை குறித்த பிரச்சாரம்.
✅ உடற்பயிற்சி முகாம்கள், வாகன பயன்பாட்டை குறைத்தல் மூலம் உடல் செயல்பாட்டை ஊக்குவித்தல்.
✅ உணவு விரயத்தைத் தடுக்கும் விழிப்புணர்வு மற்றும் உணவு சேகரிப்பு இயக்கம்.
இந்த சமூக மாற்றத்திற்கான செயல்பாட்டில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்!